கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஹமில்டனில் நடைபெற்ற விருந்து ஒன்றில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அவ்வாறு காயமடைந்தவர்களில் ஒருவரே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்து தப்பிச் சென்றவர்களில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விருந்துபசாரத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.