மலேசியாவில் வசிக்கும் தமிழருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனை திடீர் நிறுத்தம்! என்ன காரணம்?
மலேசியாவில் வசிக்கும் தமிழருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீடிரென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மலேசியாவில் இருந்து தனது தொடையில் மறைத்து வைத்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தி வந்ததற்காக 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசியரான நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.
வருகின்ற புதன்கிழமை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குத் கொரோனா தொற்று உறுதியானதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது 33 வயதான நாகேந்திரனுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை இப்போதைக்கு நிறுத்திவைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.