ஜெர்மனி வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு; 130000 குடியுரிமை!
ஜெர்மனியில் வெளிநாட்டவர்கள் 131600 பேர் குடியுரிமை பெற்று ஜெர்மனி பிரஜைகள் மாறியுள்ளதாக ஜெர்மனி புள்ளி விபர அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குடியுரிமை கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இது 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 21000க்கும் அதிகமானோர் குடியுரிமை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 19000க்கும் மேற்பட்டவர்கள் சிரிய நாட்டவர்கள் என்றும் , அவர்கள் தங்கள் திறமைகள் மூலம் விரைவாக ஜேர்மன் குடியுரிமை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
திறமையாக ஜெர்மனி மொழி பேசி இவர்கள் குடியுரிமை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் அதிகமான சிரிய நாட்டவர்கள் தங்கள் திறமைகள் மூலம் விரைவாக குடியுரிமை பெற்றுள்ளமை தொடர்ந்து ஜெர்மனியில் இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் ஏனைய வெளிநாட்டவர்களைவிட சிரிய நாட்டவர்களே வேகமாக குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
துருக்கி நாட்டவர்கள் 12000 பேரும் றுமேனி நாட்டவர்கள் 6900 பேரும் இத்தாலி நாட்டவர்கள் 5000 பேரும் ஜெர்மனி குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இவ் வருடம் குடியுரிமை பெற்றும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.