ஐரோப்பிய விமான பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்! இனி கட்டாயம் இல்லை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விமா னங்கள் மற்றும் விமான நிலையங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதி அடுத்த வாரம் முதல் நீக்கப்படுகிறதாக ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு முகவரகம் (European Aviation Safety Agency – EASA) அறிவித்திருக்கிறது.
எனினும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற மாஸ்க் பிரதான தடுப்பு முறை என்பதை அந் நிறுவனம் நினைவூட்டியுள்ள அதேசமயம் , நோயாளிகள் மற்றும் பலவீனமானவர்கள் தொடர்ந்தும் மாஸ்க் அணிவது ஊக்கப்படுத்தப் படும் என்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரான்ஸில் ரயில், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்துகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற சுகாதார விதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீக்கப்படுகிறது.
எனினும் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் அதனை அணிவது தொடர்ந்து கட்டாயமாக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பிரான்ஸில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கடந்த மார்ச் 14 முதல் முதல் முற்றாக நீக்கப்பட்டிருந்த போதிலும் மெற்றோ ரயில்கள் உட்படப்பொதுப் போக்குவரத்துகளில் அந்த விதி தொடர்ந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.