நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்; 7 நாட்களாக குறைக்கப்படவுள்ள தனிமைப்படுத்தல் நாட்கள்
வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தினை குறைக்குமாறு ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி தனிமைப்படுத்தல் காலத்தினை 14 நாட்கள் முதல் 7 நாட்களாக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றூலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவதனால் வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.