ரசிகர்களுக்கு எம்.ஸ் தோனி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசன் அவருடைய கடைசி சீசனாக இருக்கும் என சமூக வலைதளத்தில் பரவிவரும் செய்திக்கு முற்றுபுள்ள வைக்கும் விதமாக தகவல் ஒன்றை இந்தியா சிமெண்ட்ஸ் 75-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற போது தோனி தெரிவித்துள்ளார்.
இந்தியா அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2020 ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தார்.
இதேவேளை சமீபத்தில் இடம்பெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் 75- ஆம் ஆண்டு விழாவில் கொண்டாட்டத்தில் டீலர் ஒருவர் “நீங்கள் ஏன் சர்வதேச கிரிக்கெட்டில் ஃபேர்வெல் மேட்ச் விளையாடவில்லை” என தோனியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மகேந்திர சிங் தோனி “நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்ற அறிவிப்பை வெளிப்படுத்த சுதந்திர தினத்தை விட சிறந்தவொரு நாள் இருக்காது என எண்ணி அதை செய்தேன் என தெரிவித்தார்.
இதேவேளை எனக்கான ஃபேர்வெல் (Farewell) போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் அமைய வாய்ப்புள்ளது. இதைவிட சிறந்த ஃபேர்வெல் (Farewell) எனக்கு இருக்க முடியுமா என்ன என தோனி பதில் அளித்துள்ளார்.
இருந்தாலும் இந்தியாவில் நடைபெறும் அடுத்த ஐ.பில் சீசனுடன் மகேந்திர சீங் தோனி கிரிக்கெட் களத்தில் இருந்து பிரியா விடை பெறுவார் என நம்பப்படுகிறது.
அவரது வார்த்தைகளும் தற்போது அதை உறுதி செய்துள்ளதால் தோனி அடுத்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடுவது உறுதியாகி உள்ளதோடு அது சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் அமைந்துள்ளது.