கனடாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள்: மலைக்க வைக்கும் எண்ணிக்கை
கனடாவில் கொரோனா நான்காவது அலை ஏற்படும் ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
கனடாவில் கொரோனா நான்காவது அலையின் ஆபத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், சில மாகாணங்கள் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளனர்.
இந்த நிலையிலேயே சுகாதார தகவலுக்கான கனேடிய நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த ஆண்டின் முதல் 5.5 மாதங்களில் மட்டும் சுமார் 100,000 சுகாதார ஊழியர்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாக கூறியுள்ளது.
இது கனடாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 7 சதவிகிதம் என தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொரோனாவுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என பல இறந்துள்ளதாகவும் சுகாதார தகவலுக்கான கனேடிய நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கியது முதல் இதுவரை கனடாவில் 43 சுகாதார ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியானதாக தெரிய வந்துள்ளது. மேலும், தடுப்பூசி அளிக்கவும் சோதனை மேற்கொள்ளவும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இந்த ஆண்டு ஜூன் 1ம் திகதி வரையில் 34 மில்லியன் கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் 24 மில்லியன் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.