குவைத்தில் தடுப்பூசி தொடர்பான வதந்திகளும் முற்றுப்புள்ளி வைத்த சுகாதார நிபுணர்!
டென்மார்க் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இடைநிறுத்திய நிலையில் எழுந்த வதந்திகளும் முற்றுபுள்ளி வைக்கும் வகையில் தடுப்பூசி பாதுகாப்பானது என்று குவைத் சுகாதார நிபுணர் கூறுகிறார். கொரோனாவுக்கு எதிரான மருந்தாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது எனவும் மற்றும் கவலையடைய வேண்டிய தேவை இல்லை என்று குவைத் சுகாதார நிபுணர் அகமது அல் ஒட்டாயி கூறினார்.
டென்மார்க்கில் தடுப்பூசி நிறுத்தப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு அவர் இன்று தெளிவான பதிலளித்த நிலையில் இதை தெரிவித்துள்ளார். இரத்த உறைவு பிரச்சினை காரணமாக டென்மார்க் தடுப்பூசியை நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில், உலகெங்கிலும் பலருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும், இரத்த உறைவு உள்ளிட்ட ஒருவிதமான பக்க விளைவுகள் உள்ளது என்று நிரூபிக்கப்படவில்லை என்றும் அல்-ஒட்டாய்பி கூறினார்.
மேலும் அவர் முன்னெச்சரிக்கையாக அஸ்ட்ராசீன் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை டென்மார்க் நிறுத்தியிருக்கலாம் என்று கூறினார்.