கனடாவில் இளம் வயதினர் தொடர்பில் விடுக்கப்படும் எச்சரிக்கை
கனடாவில் இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதயச் செயலிழப்பு (Heart Failure) குறித்த இந்தச் செய்தி மிகுந்த எச்சரிக்கையூட்டக் கூடியது.
23 வயதே ஆன ஜென்னி மில்னே என்பவரின் அனுபவம், இந்நோய் எவ்வளவு சத்தமில்லாமல் இளைஞர்களைத் தாக்குகிறது என்பதற்கு ஒரு முக்கிய சான்றாகும். ஜென்னிக்கு ஆரம்பத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது, அது ஆஸ்துமா என்றுதான் கருதப்பட்டது.
அவருக்கு வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்திருந்தது மற்றும் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாக இருந்தன.

பித்தப்பை செயலிழப்பு என முதலில் சந்தேகிக்கப்பட்டது. பின்னரே அவருக்கு இதய வீக்கம், நுரையீரல் அடைப்பு மற்றும் இதயத் தசை சிதைவு இருப்பது கண்டறியப்பட்டது.
அவருக்கு இதய வால்வு மாற்றப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவரது மருத்துவர் இதயவியலில் ஆர்வம் கொண்டவர் என்பதால், சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு அவர் உயிர் பிழைத்தார்.
முன்பு முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இதய நோய்கள் இப்போது 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடம் அதிகம் காணப்படுவதாக டொக்டர் மார்கோட் டேவிஸ் குறிப்பிடுகிறார்.
இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய், மன அழுத்தம் மற்றும் உணவு முறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய இத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை மற்றும் துரித உணவுகள் ஏற்படக் கூடிய உடல் எடை அதிகரிப்பு, இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் மூச்சுத்திணறலை ஆஸ்துமா அல்லது அலர்ஜி என்று அலட்சியப்படுத்தல் போன்ற காரணிகளினால் இந்த இதய நோய்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2007 முதல் 2016 வரை 20-39 வயதினரிடையே இதயச் செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 40-49 வயதுடையவர்களில் 5,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் புதிதாக இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடல் உழைப்பின் போது ஏற்படும் அதிகப்படியான மூச்சுத்திணறல், கால்களில் வீக்கம், மற்றும் தீராத சோர்வு ஆகியவற்றை இளைஞர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இளம் வயதினர் தங்களுக்கு இதய நோய் வராது என்று நினைக்காமல், அறிகுறிகள் இருந்தால் உடனடியாக முழுமையான இதயப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முறையான சிகிச்சை மூலம் குணமடைய வாய்ப்புகள் அதிகம்.