வெப்ப அலை தாக்கக் கூடிய பகுதி: எச்சரிக்கை விடுத்த சுற்றுச்சூழல் அதிகாரிகள்
கிரேட்டர் ரொறன்ரோ பகுதிகளில் வெப்ப அலை தாக்க வாய்ப்புள்ளதாக கனடா சுற்றுச்சூழல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிரேட்டர் ரொறன்ரோ பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையில் வெப்பம் அதிகமாகவும் ஈரப்பதமான நிலை காணப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வழங்கப்பட்ட எச்சரிக்கையில், அதிகபட்ச பகல்நேர வெப்பநிலை 31 C முதல் 34 C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டுமின்றி ஈரப்பதம் 40 க்கு அருகில் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இரவில், வெப்பநிலை 21 C முதல் 23 C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செவ்வாய்க்கிழமை மாலைநேரம் முதல் இடி மின்னலுடன் கூடிய மழை சில பகுதிகளில் எதிர்பார்க்கலாம் எனவும், இதனால் வெப்பம் மற்றும் ஈரப்பதம் குறைய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.