முன்னறிவிப்பின்றி... ஒரேயடியாக 61 விமானங்களை ரத்து செய்த ஹீத்ரோ விமான நிலையம்
லண்டனின் ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் கடைசி நிமிடத்தில் 61 விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில், மேலும் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
போக்குவரத்தை இன்னும் கையாள முடியாவிட்டால் மேலதிக விமானங்கள் ரத்தாகும் சூழல் உருவாகும் என ஹீத்ரோ விமான நிலைய நிர்வாகம் திங்களன்று அறிவித்துள்ளது.
ஒரேயடியாக 61 விமானங்கள் ரத்தானதால் சுமார் 10,000 சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, ரத்துசெய்தல் தொழில்நுட்ப ரீதியாக அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததால், வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான இழப்பீடும் மறுக்க விமான நிறுவனங்களுக்கும் உரிமை உண்டு என கூறப்படுகிறது.
மேலும், எதிர்பார்த்த எண்ணிக்கையிலான பயணிகளுக்கு சேவை செய்யும் திறன் தங்களிடம் இருக்காது என்பதை உணர்ந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, விர்ஜின் அட்லாண்டிக் விமான சேவை நிறுவனம் மட்டுமே அதன் சேவைகளில் மாற்றங்களை உடனடியாக உறுதிப்படுத்திய போதிலும், பாதிக்கப்பட்ட டெர்மினல்களைப் பயன்படுத்தி அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ரத்து உத்தரவு வெளியிட்டுள்ளது.
மூன்று விமானங்களை மட்டும் ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்ட விர்ஜின் நிறுவனம், ஆனால் தங்கள் வாடிக்கையாளர்களின் பயணம் பாதிக்காத வகையில் கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, பயணிகள் பிற்காலத்தில் மீண்டும் முன்பதிவு செய்ய அல்லது பணத்தைத் திரும்பக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.