ஹெலிகாப்டர் விபத்து: இரு விமானிகளுக்கு நேர்ந்த சோகம்! சீனாவில் சம்பவம்
சீனாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் சீனாவின் தலைநகரான பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மாலை 3.30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பெல் 505' ரக ஹெலிகாப்டரே விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 2 விமானிகளும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டர், பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானது.
[]
விபத்தில் ஹெலிகாப்டர் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பலியான விமானிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து அறிய சீன அதிகாரிகள், சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளனர்.