இந்திய வம்சாவளி கனேடிய ஹொக்கி வீரர் உட்பட மூவர் மரணம்: வெளியான காரணம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட மூன்று ஹொக்கி வீரர்களின் மரணத்திற்கான காரணம் உரிய ஆய்வுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் 21ம் திகதி நடந்த இந்த சாலை விபத்திற்கு காரணம் மது மற்றும் கட்டுப்பாடற்ற வேகம் என்றே அதிகாரிகள் தரப்பு கண்டறிந்துள்ளது. குறித்த சம்பவத்தில் இந்திய வம்சாவளி ஹொக்கி வீரரான 16 வயது ரோனின் சர்மா, 17 வயது பார்க்கர் மேக்னுசன் மற்றும் 16 வயது காலேப் ரெய்மர் ஆகியோர் மரணமடைந்தனர்.
குறித்த சம்பவம் மொத்த கனடாவையும் உலுக்கியதுடன், ஹொக்கி கூட்டமைப்பை நொறுங்க செய்தது. இந்த நிலையில், விசாரணை அதிகாரிகள் தற்போது வெளியிட்டுள்ள தகவலில், வாகனத்தை பார்க்கர் மேக்னுசன் செலுத்தியிருந்ததாகவும், எஞ்சிய இருவரும் அவருடன் பயணித்ததாகவும் கூறுகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த வாகனமானது அதிகாலை மரத்தில் பலமாக மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் நண்பர்கள் மூவரும் சம்பவயிடத்திலேயே பலியாகினர். மேலும், மணிக்கு 20 கி.மீ வேகத்தில் சென்றிருந்த வாகனம், விபத்துக்கு முன்னர் மணிக்கு 187 கி.மீ வேகத்தில் பாய்ந்து சென்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் விபத்து நடந்த பகுதியில் அனுமதிகப்பட்டுள்ள வேகம் என்பது மணிக்கு 30ல் இருந்து 50 கி.மீ மட்டுமே எனவும் கூறுகின்றனர்.
மேலும், பார்க்கர் மேக்னுசன் ரத்த மாதிரிகளில் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும் விபத்தில் மரணமடைந்துள்ளதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.