பிரான்ஸில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் ! விமானம் மூலம் எடுத்துச் செல்லப்படும் நோயாளிகள்
பிரான்ஸில் பரிஸ் நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில். பரிஸ் நகரில் இருந்து விமானம் மற்றும் ஹெலிகொப்டர் மூலமாக கொரோனா நோயாளிகளை வேறு நகரங்களுக்கு பிரான்ஸ் அரசு நகர்த்தி வருகிறது .
பரிஸ் வைத்தியசாலைகள் முட்டி வழிவதனால், அங்கே இடம் இல்லை என்றும் கூறப்படுகிற நிலையில் அரசாங்கள் நோயாளிகளை வேரு நகரங்களுக்கு கொண்டு செல்வதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் பிரான்ஸில் போதிய அளவு தடுப்பு மருந்தும் இல்லை என்பதனால் தடுப்பூசி வழங்கப்படுவது தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தர்பொழுது ந்பிரான்ஸின் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று தலை விரித்து ஆடுகிறது.
பிரான்ஸ் நாட்டில் ஒரு வகையாக உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் அது ஏற்கனவே கொரோனா வந்து குணமடைந்த நபர்களையும் அது தாக்கி வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.