ஆபிரிக்காவில் சிடோ புயலால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு!

Sulokshi
Report this article
ஆபிரிக்காவில் ஏற்பட்ட 'சிடோ' புயலின் தாக்கத்தினால் இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதுடன் இந்த புயலுக்கு 'சிடோ' என பெயரிடப்பட்டது.
கடந்த சில நாட்களாகக் கிழக்கு ஆபிரிக்கா அருகே நிலை கொண்டுள்ள இந்த புயலின் தாக்கத்தால், மலாவியில் கனமழை பெய்து வருகின்றது.
இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொசாம்பிக்கையும் 'சிடோ' புயல் தாக்கியதுடன், நியாஸ்சா, கபோ மற்றும் டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
மேலும் புயல் காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 34 பேர் உயிரிழந்ததுடன் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.