ரொறன்ரோவில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படங்கள்
ரொறன்ரோவில் பாரியை அண்டிய பிரதேசத்தில் சுழல்காற்றினால் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் பிரின்ஸ் வில்லியம் வே மற்றும் மப்லிவியூ ட்ரைவ் பிரதேசத்தை இந்த சுழல்காற்று தாக்கியுள்ளது.
இந்த சுழல் காற்றினால் வீடுகள் சிதைந்து. மரங்கள் முறிந்து பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு கிலோ மீற்றர் பகுதியில் இந்த சுழல்காற்று பயணம் செய்த பகுதியில் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 8 பேரில் நான்கு பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் .
1985ஆம் ஆண்டு இதேபோன்ற பாரிய சுழல் காற்று வீசியதில் 600 வீடுகள் சேதமடைந்ததுடன் 8 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அதற்குப் பின்னர் தற்போது இந்த மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.