நகைச்சுவை செய்த கணவர்....விவாகரத்துக் கோரிய மனைவி
பிரிட்டனில் கணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தனது மனைவியைப் பற்றி கேலி செய்த சம்பவம் ஒரு விவாகரத்திற்கு காரணமானது.
கணவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் 'பார்ட்னர்ஸ் டிபார்ட்மென்ட்டை புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' ('time has come to update the partner's department') என்று எழுதப்பட்டிருந்ததாக ‘தி சன்’ என்னும் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது . இதனால் மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளான மனைவி கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார்.
இது தொடர்பில் கணவர் கூறியதாவது,
எனக்கு 43 வயது என்றும், எனது மனைவிக்கு 41 வயது என்றும் அந்த நபர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். எங்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது, 12 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நாங்கள் எங்கள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் மற்ற தம்பதிகளை போலவே எங்களுக்கு இடையிலும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது பள்ளி தோழிகளின் சமூக வலைத்தளத்தைக் கண்டறிந்த கணவர் அவர்களிடம் வரம்பு மீறிய உரையாடலில் ஈடுபட்டார். இப்படி நீண்ட சேட் அவருக்கு மிகவும் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. இந்த உரையாடலை படித்து அவரது மனைவி கடும் கோபத்துக்கு ஆளானதாகவும். இதனால் இந்த பிரச்சனையானது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மிகவும் சந்தேகமடைந்ததாகவும், அவர் தனது தொலைபேசியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
அப்பொழுது 'பார்ட்னர்ஸ் டிபார்ட்மென்ட்டை மேம்படுத்த வேண்டிய நேரம் இது' ('time has come to update the partner's department') என்று எனது நண்பருக்கு மெசேஜ் அனுப்பினேன். இதனையும் படித்த தனது மனைவி அதனை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாமல், தானிடம் தற்போது விவாகரத்து கோரியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மனநல நிபுணர்கள் கூறியதாவது,
நிச்சயமாக நீங்கள் யாருடனும் உடல் ரீதியாக தொடர்பில் இல்லை என்றாலும், மனதளவில் நெருக்கமாக பழகுவதும் ஒரு வகையான ஏமாற்று வேலை கூறுகிறார்கள். இதற்கு எந்த காரணமும் கூறி தப்ப முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.