உயிருடன் புதைந்து போவதை போன்ற உணர்வு! கொரோனாவிலிருந்து மீண்டவரின் பகீர் பதிவு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட தருணங்களை விவரிக்கிறார் நடன ஆசிரியரும், மூன்று பிள்ளைகளின் தாயுமான Sandy Rosen(வயது 59).
அவர் கூறுகையில்,
கொரோனா தொற்றுக்கு ஆளானது உறுதியானதும், தானும், தன்னுடைய கணவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டோம், சாதாரண அறிகுறிகளுடன் காய்ச்சல் இருந்தது.
சில நாட்களில் இவ்வளவு கொடூரமாக மாறும் என நான் நினைக்கவில்லை, சில நாட்களில் சோம்பல், உடல் பலவீனம், மைக்ரேன் போன்ற தொந்தரவுகள் வரத்தொடங்கியது.
உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொண்ட போது, உங்களால் சுவாசிக்க முடிகிறதா? என கேட்டார்கள், மற்ற அறிகுறிகள் மீது கவனம் செலுத்தியதால் அதை நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்து வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன், 8வது நாளில் என்னை உயிருடன் புதைப்பதை போன்ற உணர்வு இருந்தது, நான் மிக கனமாக உணர்ந்தேன், காற்றும் கனமாக இருந்தது.
அடுத்த நாள் மருத்துவமனைக்கு சென்ற போதே, நிமோனியாவால் நான் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது, என்னுடைய நுரையீரல் செயலிழந்து கொண்டிருந்தது, உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் என்னை அனுமதித்து சிகிச்சையளிக்க தொடங்கினார்கள்.
நான்கு, ஐந்து நாட்களில் எனது உடல்நிலை சீராகி வேறு அறைக்கு மாற்றப்பட்டேன், தற்போது முழுமையாக கொரோனாவில் இருந்து குணமாகி வீடு வந்து சேர்ந்தாலும் அந்த நாட்கள் மிக கொடூரமானவை என விவரிக்கிறார் Sandy Rosen.