60 வயதிற்கு மேற்பட்டோருக்கு லெபனான் இலங்கை தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
லெபனானில் 60 வயதிற்கு மேற்பட்டோர் மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என் லெபனான் இலங்கை தூதரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லெபனான் நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகமாகவே பரவி வந்தது. இதனால் அந்நாட்டு அரசு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு லெபனானில் பண்ணிக்கு செல்வதற்கு தற்காலிக தடை விதித்திருந்தது.
தற்போது லெபனானில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டோர் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்கி மீண்டும் பணிக்கு வருவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக சுகாதார மையத்தின் அனுமதிபெற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களுக்கே இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத் தகவல் தெரிவித்துள்ளது.