சுற்றுலாப்பயணிகளுக்கு பிரான்ஸ் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
ஐரோப்பா தவிர்த்த ஏனைய நாடுகளில் இருந்து பிரான்ஸ் வரும் பயணிகள் அனைவருக்கும் பிசிஆர் அறிக்கைகள் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) புதன்கிழமை அரச பேச்சாளர் Gabriel Attal இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை வரும் வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு வரை தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்கள் அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்படாத அனைத்து நாடுகளிலிலும் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் ‘எதிர்மறை’ முடிவுகளுடன் கூடிய பிசிஆர் அறிக்கைகள் கொண்டுவரவேண்டும் எனவும், அது 48 மணித்தியாலத்திற்கு உட்பட்டவையாக இருக்கவேண்டும் எனவும் கேப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாப்பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும், போட்டுகொள்ளவிட்டாலும் கண்டிப்பாக பிரிஆர் அறிக்கைகள் தேவை எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சர்கள் மாநாட்டை அடுத்து, ஊடகங்களிடம் உரையாற்றும் போது கேப்ரியல் அத்தால் இதனை தெரிவித்தார்.