உலக சுகாதார அமைப்பு ஊழியர்களின் தகாத செயல்...காங்கோ அரசு விசாரணை
காங்கோ குடியரசில் எபோலா நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் போது அதில் இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நிவாரண பணியாளர்கள் மட்டுமின்றி உலக சுகாதார ஊழியர்களும் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2018 மற்றும் 2020 காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 83 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்களில் நால்வரின் உடன்படிக்கைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்ட 29 பெண்கள் கர்பமடைந்ததாகவும், அவர்களுள் சிலர் கட்டாயக் கருக்கலைப்புக்கு வறுபுறுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் குற்றம் புரிந்தவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.