ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமர் பதவியேற்பு
சுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி (Ariel Henry) பதவியேற்றுள்ளார்.
எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த கிளாட் ஜோசப் உடன் காணப்பட்ட அரசியல் மோதலில் ஹென்ரி (Ariel Henry) அப்பதவியை நிராகரித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிளாட் ஜோசப் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஹெய்ட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென் (Ariel Henry) இன்று பதவியேற்றுள்ளார்.
ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ், (President Joanne Moyes)கடந்த 07ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.