ஒண்டாரியோவில் அதிகரித்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை
ஒண்டாரியோவில் கண்டறியப்பட்டுள்ள கோவிட் 19 தொற்றுக்களின் எண்ணிக்கையும், அது சார்ந்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும், இன்று புதிய மைல்கல்களை கடந்துள்ளன.
மாகாணத்தின் மொத்த பாதிப்புக்கள், ஒரு மில்லியன் என்ற மைல்கல்லை தாண்டி, ஒரு மில்லியன் 1,455 ஆகவும், மொத்த உயிரிழப்புக்கள் 11,000 என்ற மைல்கல்லை கடந்து 11,004 ஆகவும் உள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில், 20,716 பரிசோதனைகளே இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 4,790 பாதிப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொற்றுவீதம் 18.4 ஆக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவுகளில் 615 பேர் அடங்கலாக, 3,861 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.