நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு...காரணம் என்ன?
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் கொரோனா வைரஸானது ஆண்டுகள் கடந்தும் தனது ஆட்டத்தைக் குறைக்கவில்லை.
அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஆதிக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று உருமாறி வருவதுதான். டெல்டா வகை கொரோனா தான் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதற்கு அதி முக்கிய காரணம்.
தற்போது இந்த டெல்டா வைரஸ்தான் நியூசிலாந்து நாட்டையும் ஆட்கொண்டுள்ளது. நியூசிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பானது 100க்கும் கீழாக தான் இருந்து வந்தது.
இந்த நிலையில் டெல்டா வைரஸ் காரணமாக தற்போது தினசரி பாதிப்புகள் 200 க்கும் மேலாக அதிகரித்து வருகின்றன.
நியூசிலாந்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான ஆக்லாந்தில் நாட்டில் அதிகபட்சமாக முதன் முறையாக 206 கொரோனா பாதிப்பு பாதிவாகி உள்ளது. இதுவே நியூசிலாந்து வரலாற்றில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். நியூசிலாந்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2500-ஐ கடந்துள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த போதிலும் உருமாறிய கொரோனா அங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.