இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 39,726 பேருக்கு தொற்று
இந்தியாவில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்தியாவில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,14,331 அதிகரித்துள்ளது. இவ்விடயம் மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘கடந்த 24 மணி நேரத்தில் நிறைவடைந்த காலப்பகுதியில் 39,726 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று ஒரே நாளில் 154 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,370 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று 20,654 பேர் தொற்றிலிருந்து மீட்டுள்ளதனை தொடர்ந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,83,679 உயர்ந்து காணப்படுகின்றது.
மேலும் 2,71,282 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.