இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரேநாளில் 26 ஆயிரம் பேருக்கு தொற்று
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று 25,320 ஆகவும், நேற்று முன்தினம் 24,882 ஆகவும் இருந்தது.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு நேற்றைய 1,13,59,048 என்ற எண்ணிக்கையில் இருந்து 1,13,85,339 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரே நாளில் தொற்றினால் 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை நேற்று 161 ஆகவும், நேற்று முன்தினம் 140 ஆகவும் இருந்தது. இதன்மூலம் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,58,607 ல் இருந்து 1,58,725 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 17,455 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,89,897 இல் இருந்து 1,10,07,352 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை இந்தியாவில் இதுவரை 2,99,08,038 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.