அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்; அதிரடி உத்தரவை பிறப்பித்த ஜோ பைடன்
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடி நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகிளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அதனை கட்டுப்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.
அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்திட அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி அந்நாட்டு அதிபர் ஜோபைடன், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 30 நாட்களுக்குள் துப்பாக்கிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒரு விதியை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.