அத்துமீறி ஊடுருவிய மீனவர்களை சுட்டுபிடித்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்!
இந்திய கடல் பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் மீனவர்கள் 2 பேர் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்.
குஜராத் - கட்ச் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டி ஹரமி நல்லா கடற்கழி பகுதி உள்ளது.300 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இப்பகுதியில் பாகிஸ்தானிய மீனவர்கள் அடிக்கடி அத்துமீறி நுழைவது வழக்கமாக இருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை (23-06-2022) இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் மீனவர்களின் 9 படகுகளை கண்டனர். அவற்றை சுற்றிவளைத்துப் பிடித்தனர்.
அப்போது அந்தப் படகுகளில் இருந்த மீனவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களில் இருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுப் பிடித்தனர்.காலில் காயமடைந்த அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.