மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்ற இந்திய என்ஜினீயர்....பரபரப்பு தீர்ப்பு வழங்கிய அமெரிக்கா நீதிமன்றம்
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியா வம்சாவளியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் தந்து மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்ற வழக்கு தொடர்பில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஐடி நிபுணர் சங்கர் நாகப்பா ஹங்குட் (55). இந்தியரான இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
2019 இல், அவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளைக் கொன்றார். இந்த வழக்கு தொடர்பாக சங்கர் நாகப்பா ஹங்குட் கைது செய்யப்பட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
விசாரணையில், மனைவி ஜோதி (46), குழந்தைகள் வருண் (20), கவுரி (16), நிசால் (13) ஆகியோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவர்களுக்கு பணம் கொடுக்க வற்புறுத்தியதால் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பிளேசர் கவுண்டி நீதிமன்றம் பின்னர் அவருக்கு பரோல் இல்லாமல் சிறைத்தண்டனை விதித்தது. அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.