அமெரிக்காவில் இந்தியர் கொடூரக்கொலை ; ட்ரம்ப் வழங்கிய உறுதி
அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.
அதிகபட்ச தண்டனை
இந்த நிலையில், இந்தியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ட்ரம்ப், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
டல்லாஸில் நடந்த சந்திர நாகமல்லையா கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றி அறிந்தேன். கியூபாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறியால், மனைவி மற்றும் மகன் முன்னிலையில் இந்த மதிப்புமிக்க நபர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதுபோன்ற நபர்கள் நம் நாட்டில் ஒருபோதும் இருக்கக் கூடாது.
இதுபோன்று சட்டவிரோதமாக குடியேறும் குற்றவாளிகள் மீது மென்மையாக நடந்து கொள்ளும் போக்கு எல்லாம் என்னுடைய ஆட்சியில் முடிந்து விட்டது.
பொலிஸ் காவலில் இருக்கும் இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.