இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அமெரிக்காவில் கைது ; பல கோடி ரூபாய் மோசடி
போலி இன்சூரன்ஸ் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் சாவரின் ஹெல்த் குரூப் என்ற பெயரில் மருந்து நிறுவனத்தை நடத்தி வருபவர் டன்மாய் ஷர்மா,61. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மனநல மருத்துவராக திகழ்ந்து வரும் இவர், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியை பூர்வீகமாக கொண்டவராவார்.
பல கோடி மோசடி
இவர் தெற்கு கலிபோர்னியாவில் போதை மறுவாழ்வு மையங்களை நடத்தி வந்துள்ளார்.
சர்மாவின் சாவரின் ஹெல்த் குரூப் நிறுவனம், நோயாளிகளுக்கு தெரியாமல் அவர்களின் பெயரில் காப்பீட்டுத் திட்டங்களை பதிவு செய்து, காப்பீட்டுத் தொகையை பெற விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவர் 180 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் கீழ், அவரது வீடு மற்றும் மருத்துவ மையங்களில் எப்.பி.ஐ., சோதனை நடத்தியது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தொழிலதிபர் டான்மாய் ஷர்மாவை அதிகாரிகளை கைது செய்தனர்.