கன்னத்தில் அறைந்த இந்தியர்...சிறையில் அடைத்த அரசு
முகக்கவசத்தை அணியச்சொன்ன மலேசியர் ஒருவரை கன்னத்தில் அறைந்த இந்தியருக்கு 7 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகில் தற்போது கொரோனாவின் தாக்கம் தணிந்துள்ளதே தவிர இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இருப்பினும் பலவேறு நாடுகள் தற்போது முகக்கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
ஆனால் சிங்கப்பூர் அரசாங்கம் மற்றும் நாட்டில் தீவிரமாக கொரோனா பரவி வருவதன் காரணமாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட சந்திரசேகர் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் பொது இடத்தில முகக்கவசத்தை முறையாக அணியவில்லை என கூறப்படுகிறது. இதனைப்பார்த்த ஒருவர் முகக்கவசத்தை சரியாக அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் மீண்டும் அந்த நபர் கூறியதையடுத்து கோபமடைந்த சந்திர சேகர் அந்த நபரைக் கன்னத்தில் அறைந்த்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் பொலிஸார் நடத்திய விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதன் காரணமாக சந்திர சேகருக்கு அந்நாட்டு அரசு 7 வாரம் சிறைத்தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.