கனடா மருத்துவரை நம்பி பெரும் தொகையை இழந்த இந்தியப்பெண்!
கனடாவில் மருத்துவராக பணிபுரிவதாக கூறி இளம்பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றி பணமோசடி செய்த நைஜீரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் புதுவை சுய்ப்ரேன் வீதியை சேர்ந்தவர் சுனைனா நரங்.
இவர் திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டு திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்திருந்தார். அப்போது இவரை தொடர்பு கொண்டு பேசியவர் தான் கனடாவில் மருத்துவராக பணிபுரிவதாக கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
இந்த நிலையில் அந்த நபர் கனடாவில் மருத்துவமனை கட்ட பணம் கேட்டுள்ளார். கனடா மருத்துவரை திருமணம் செய்ய போகிறோம் என மகிழ்ச்சி மற்றும் கனவில் இருந்த சுனைனா நரங் ரூ.54 லட்சத்தை அனுப்பி வைத்தார்.
அதன்பின் அவர் தனது செல்போனை சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டதனால் சந்தேகம் அடைந்த சுனைனா நரங் சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் அனிடேபே (44) என்பவரை கைது செய்தனர்.