வெளிநாடொன்றில் திடீரென உயிரிழந்த இந்திய இளைஞன்!
குவைத்தில் வேலை செய்து வந்த இந்திய இளைஞர் சிராஜுதீன்(வயது-32) மாரடைப்பால் உயிழந்தார். இவர் இந்தியா, கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆந்திராவில் இருந்து குடிபெயர்ந்து நீண்ட காலமாக வகித்து வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் ஃபர்வானியாவில் உள்ள ஒரு அரபு உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
அவருக்கு தங்கியிருந்த அறையில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டது, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர் ஆனால் பரிசோதனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உயிரிழந்த சிராஜுதீன் அவர்களுக்கு ஷமீனா என்ற மனைவியும் , முஹம்மது ஷாஹால், பாத்திமா மற்றும் அய்மான் மெஹ்பின் என்ற 3 குழந்தைகளும் உள்ளது. இவருடைய தந்தை மஸ்தான் ஷேக், தாய் மஸ்தானி மற்றும் சகோதரர் கரீம் உள்ளிட்டவர்கள் குவைத்தில் உள்ளனர்.
குவைத் கே.எம்.சி.சி அமைப்பினர் ஒருங்கிணைப்பில் சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு உடல் குவைத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.