அமெரிக்காவில் இந்திய இளைஞருக்கு 15 முறை கத்திக்குத்து
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் வைத்து இந்தியா் ஒருவா் 15 முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த சொஹைல் என்ற வாலிபர், அமெரிக்காவின் உட்டாவின் வெஸ்ட் வேலி சிட்டியில் உள்ள Valley Fair Mall என்ற வணிக வளாகத்தில் இருக்கும் நகைக்கடையில் பணியாற்றி வந்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று சொஹைல் வழக்கம் போல பணியில் இருந்தபோது, அங்கு வந்த பீட்டர் மைக்கேல் லார்சன் என்ற 48 வயது நபர் குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் கேட்டுள்ளார்.
உடனே அந்த நபர், 'நீ முஸ்லிமா?' எனக் கேட்க, சொஹைல் 'ஆம்' என்று சொன்ன நிலையில், அந்த நபர் கத்தியால் அவரை கொடூரமாக குத்தியுள்ளார்.
காவல்துறை அறிக்கையின்படி, சொஹைலின் உடல் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக் குத்து விழுந்துள்ளதால் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சோஹைலை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.