தமிழில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் தனி இசைப்பாடல்கள்!
உலகில் ஒரு காலநிலையில் ஆங்கில தனி இசைப்பாடல்கள் மற்றும் வெறு சில மொழிகளில் வெளியாகும் தனி இசைப்படங்கள் இணையதளத்தில் கடல் கடந்தும் பிரபலமாக இருந்தன.
ஆனால் இந்திய மொழிகளில் அப்படியில்லை தனி இசைப்பாடல்களை வெகு சொற்பம் என்ற நிலையில், திரையிசைப்பாடல்களையே ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வந்தனர்.
இப்போதைய காலகட்டத்தில் தமிழில் தனி இசைப்பாடல்கள் வெளியாகி வியாபார ரீதியில் வெற்றியிடையத் தொடங்கியுள்ளது. இதேவேளை சமீபத்தில் தமிழில் வெளியாகும் தனி இசைப்பாடல்கள் ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அந்த வகையில் தமிழில் அண்மையில் வெளியான என்ஜாய் எஞ்சாமி. வாடா ராசா, குட்டிப்பட்டாசு என தனி இசை பாடல்கள் வெகுஜன ரசிகர்களை கவர்ந்துள்ள வேளையில் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
இணையதளத்தில்என்ஜாய் எஞ்சாமி பாடலை சுமார் 34 கோடி பேரும், குட்டி பட்டாசு பாடலை 13 கோடி பேர் இதுவரையில் கண்டு ரசித்துள்ளனர். இவ்வாறான தனி இசைப்பாடல்கள் இணையதளத்தில் வெற்றிபெறுவதன் மூலம் புதிய களம் கிடைத்துள்ளதாக, பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் என பலரும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
இதேவேளை தனி இசைப்பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ள நிலையில் அடுத்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி காண வாய்ப்புள்ளதாக கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள்.