இந்தோனேசியாவில் கொரோனவால் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் கொரோனாவால் குழந்தைகளின் உயிரிழப்பு ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்றால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். இவர்களில் பலர் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த இறப்பு வீதம் மற்ற நாடுகளை விட அதிகமாகும். நாடு முழுவதும் டெல்டா வகை கொரோனா தொற்று அதிகரித்துள்ளதே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ஒரேநாளில் புதிதாக ஐம்பதாயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்து 566 பேர் உயிரிழந்ததாகவும், தொற்றுக்கு ஆளானோரில் 12 புள்ளி 5 விழுக்காட்டினர் குழந்தைகள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 12ஆம் நாளுடன் முடிந்த வாரத்தில் மட்டும் 150க்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாகவும், இவர்களில் பாதிப்பேர் ஐந்து வயதுக்குட்பட்டோர் என்றும் தெரியவந்துள்ளது.