வெளிநாடொன்றில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேஷியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பண்டா கடலில் இன்று (30-12-2021) காலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிலநடுக்கம் இந்தோனேஷியாவின் தென்மேற்கு மலுகுவின் தியாகூர் நகரின் கிழக்கே 125 கி.மீ. கிழக்குப் பகுதியில் கடலுக்கு அடியில் 183 கி.மீ ஆழ்த்தில் மையம் கொண்டிருந்தது.
இருப்பினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் தென்மேற்கு மலுகுவில் இரண்டு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளதாகவும், வேறு சில சிறிய சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கத்தால் சுனாமி எதுவும் ஏற்படவில்லை. 5.2 ரிச்டர் அளவுள்ள மிகப்பெரிய அளவிலான மூன்று அதிர்வுகளை பதிவாகியுள்ளது.
இதையடுத்து, நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்களைத் தொடர்ந்து அறியவும், நிலநடுக்கத்தால் ஏற்படும் விரிசல்கள் அல்லது சேதமடைந்த கட்டிடங்களைத் தவிர்க்குமாறு அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ள நிலையில், மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.