இந்தியாவில் கொரோனாவின் கோரதாண்டவம்; ஒரேநாளில் 4.12 இலட்சம் பேருக்கு தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் அதிகரித்து வருகிறது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 4,12,262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2,10,77,410ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த நாளாந்த கொரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவிலிருந்து 1,72,80,844 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,29,113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் , தற்போது 35,66,398 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3,980 பேர் உயிரிழந்துள்ளதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,01,68 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இதுவரை மொத்தம் 16,25,13,339 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.