அமெரிக்காவில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் உயர்வு
ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் பணவீக்கம் இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்கர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை அளவிடும் நுகர்வோர் விலை குறியீடு (CPI), கடந்த பெப்ரவரி மாதத்தில் 2.4 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் ஆண்டுக்கு 3.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஒரே மாதத்தில் எரிபொருள் விலைகள் 21 சதவீதம் உயர்ந்துள்ளன. இது 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மாதாந்திர உயர்வாகும்.
இந்த விலை ஏற்றத்தினால் அமெரிக்காவில் ஒரு காலன் எரிபொருளின் சராசரி விலை 4.15 டாலராக உயர்ந்துள்ளது.

இது போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட சுமார் 40 சதவீதம் அதிகமாகும்.
இந்த விநியோகத் தடைகள் தற்காலிகமானவை என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தாலும், ஏப்ரல் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அதிகரித்துள்ளதால், சாதாரண பொது மக்களின் வாழ்வாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.