இலங்கையில் 11 பயங்கரவாதக் குழுக்களுக்குத் தடை; தமிழகத்தில் எதிரொலி
இலங்கையில் 11 பயங்கரவாதக் குழுக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச விமான நிலையங்களிலும், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்வதற்கான நடைமுறையை இலங்கை அறிவித்ததை தொடர்ந்து அந்த அச்சுறுத்தல் உடனடியாக உணரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு வெளியிட்ட ஒரு அறிவிப்பில், டிஜிபி திரிபாதி இலங்கையில் 11 பயங்கரவாத அமைப்புகளை தடை செய்வது இந்தியாவில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், இன்னும் துல்லியமாக தமிழ்நாட்டில் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
சட்டவிரோத அமைப்புகளின் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் புவியியல் ரீதியாக மிக அருகாமையில் தமிழகம் உள்ளதால், எளிதாக அவர்கள் இங்கு புகலிடம் தேடலாம் என்றும் அவர் கூறினார். இலங்கையிலிருந்து மத அடிப்படைவாதிகள் விமானம் அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டிய திரிபாதி, படகுகள் மூலமா தீவிரவாதிகளை தமிழகத்திற்குள் நுழையக் கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக உளவுத்துறை நடவடிக்கையை பலப்படுத்துவதோடு, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் மூத்த போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார்.
இலங்கை அரசாங்கத்தால் இப்போது தடைசெய்யப்பட்டுள்ள இலங்கை தவ்ஹீத் ஜமாத் போன்ற பல அடிப்படைவாத அமைப்புகள் இந்தியாவின் தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றி, இலங்கை அரசாங்கம் 11 தீவிரவாத குழுக்களை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.