பேச்சுவார்த்தைக்கு முன்பாக போர் ஒத்திகையை தொடங்கிய ஈரான்! வெளியான முக்கிய தகவல்
அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்கவுடன் பதற்றம் அதிகரித்து உள்ளதால் ஈரான் தந்து போர் பயிற்சியை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே பல மாத இழுபறிகளுக்கு பின்னர் ஈரானும், ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக வியன்னாவில் வரும் 29ஆம் திகதி அன்று நேரடி பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளன.
இந்நிலையில் ஈரான் தனது வருடாந்திர போர் பயிற்சியை ஓமன் வளைகுடாவின் கடலோரப்பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்கே 10 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள இடத்தில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கடற்படை, விமானப்படை, ராணுவம் என முப்படைகளும் கலந்து கொண்டுள்ளன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ போக்குவரத்து விமானம், நீர்மூழ்கிக்கப்பல்கள், டிரோன்கள் இதில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து அதிகார தகவல் வெளியாகவில்லை.