இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் ; சிதைந்து கிடக்கும் இஸ்ரேலின் மிகப்பெரிய நகரம்
ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஜெரூசலேத்தில் வெடிப்பு சத்தங்களை கேட்க முடிந்ததாகவும் டெல் அவியில் கரும்புகை தென்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.
பொதுமக்கள் மீதான தாக்குதல்
ஏவுகணைகள் கட்டிடங்கள் மீது விழுந்துள்ளன,இதனால் கட்டிடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது,உயிரிழப்புகள் இல்லை ஆனால் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர் ஆனால் பெருமளவு அழிவுகள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் செய்தியாளர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெருமளவு ஏவுகணைகள் இஸ்ரேலின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான டெல்அவியை தாக்கின என தெரிவித்துள்ள டெலிகிராவ் இஸ்ரேல் இது பொதுமக்கள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
நகரின் மத்தியில் உள்ள உயரமான கட்டிடமொன்று சேதமடைந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை சனிக்கிழமை காலையிலும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணைதாக்குதல்களில் இது தப்புவதற்காக ஜெரூசலேத்தில் புகலிடங்களை நோக்கி ஓடியுள்ளனர்.
இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம் ஈரான் எல்லை மீறிவிட்டது என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.