அமெரிக்காவின் எஃப்-18 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்; வீடியோவால் வெடித்த சர்ச்சை
அமெரிக்காவின் எஃப்-18 போர் விமானத்தை குறிவைத்துத் தாக்கியதாக ஈரானிய படைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், இதுதொடர்பான விடியோ வைரலான நிலையில், இதனை போலியென அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையிலான இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனால், இந்தப் போர் கடந்த மார்ச் 23 அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கைவிட வேண்டும் மற்றும் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என்பதை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட 15 முக்கிய அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அரசு முன்மொழிந்தது.
இருப்பினும், அமெரிக்க தாக்குதலுக்கு மீது ஈரான் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா உயர்திறன் கொண்ட ராணுவ விமானங்களில் ஒன்றான எஃப்-18 போர் விமானத்தை ஈரானின் புரட்சிக்கர காவல்படை தாக்கி அழித்ததாக ஈரானின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வீடியோ வெளியிட்டுள்ளது.
இந்த விடியோ வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்த விடியோ போலியானது என்று அமெரிக்க தலைமை ராணுவக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, சாபஹார் பகுதிக்கு மேலே பறந்த எஃப்-18 ரக போர் விமானம் தாக்கப்பட்டதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவந்தாலும், போர் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அமெரிக்காவை பழித்தீர்ப்போம் என்றும் ஈரான் சூளுரைத்துள்ளது.
இதற்கு மத்தியில் கடந்த வாரங்களில் அமெரிக்காவின் எஃப் 15 ரக போர் விமானம், எதிரிகளால் தாக்க முடியாத மின்னல் வேகத்தில் பயணிக்கக் கூடிய அமெரிக்க விமானப் படையின் அதிநவீன 5 ஆம் தலைமுறை போர் விமானமான எஃப் - 35 லைட்னிங் 2 ரக போர் விமானம் உள்ளிட்டவைகளையும் தாக்கி அழித்த வீடியோக்களையும் வெளியிட்டிருந்தது.