ஜேர்மனில் கஞ்சா சட்டபூர்வமாகிறதா?
ஜேர்மனின் புதிய அரசாங்கம் கஞ்சாவை சட்டபூர்வமாக்க திட்டமிட்டுள்ளது.
ஜேர்மனியில் மூன்று முன்னணி காட்சிகள் புதிய அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை வெளியிட்டதையடுத்து புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைக்க தயாராக உள்ளது. முன்னதாக ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டுகால ஆட்சி முடிவுற்றதை அடுத்து SPD தலைவர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் சான்செலராக பதவியேற்கவுள்ளார்.
மத்திய-இடது SPD, தாராளவாத சுதந்திர ஜனநாயகவாதிகள் கட்சி மற்றும் பசுமைவாத கட்சிகள் சேர்ந்த இந்த கூட்டணியானது புதன்கிழமையன்று, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் நிகழ்ச்சி நிரலை 180 வெளியிட்டது.
அதில், ஜேர்மனியில் நிலக்கரி சக்தியைக் குறைத்தல் மற்றும் கோவிட் தொற்று நோயைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் போன்ற பிற நடவடிக்கைகளுடன், உரிமம் பெற்ற கடைகளில் விற்கப்படும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கான உறுதிமொழியும் அதில் அடங்கியுள்ளது கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ மரிஜுவானாவை சட்டபூர்வமாக்கியத்தில் இருந்து ஜேர்மனியின் சந்தை ஐரோப்பாவில் மிக பாரியதாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய ஜேர்மன் சட்டத்தின்படி கஞ்சாவை உட்கொள்வது சட்டவிரோதமல்ல ஆனால் அவற்றினை வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தற்போது கஞ்சா ஜேர்மனில் சட்டபூர்வமானால் உலகின் மிகப்பெரிய கஞ்சா சந்தையாக ஜேர்மன் பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.