அவ்வளவுதான்... நம் கதை முடிந்தது: காட்டுத்தீயால் உருவான புகையின் நடுவே பயணித்த விமான பயணியின் திகில் அனுபவம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் புகையின் நடுவே விமானம் பறப்பதைக் கண்டு அவ்வளவுதான் நம் கதை முடிந்தது என்று தாங்கள் எண்ணியதாக தெரிவிக்கிறார்.
கனடாவில் வான்கூவரிலிருந்து Kelowna செல்லும் விமானம் ஒன்றில் பயணித்துள்ளார் Michelle Gregoire என்ற பெண்.
விமானம் விமான நிலையத்தில் இறங்குவதற்கு கொஞ்சம் நேரமே இருக்கும்போது, திடீரென இருட்டாகியிருக்கிறது. காட்டுத்தீயால் எழுந்த புகையின் வாசனையும் பயணிகளை எட்ட, அச்சமடைந்திருக்கிறார்கள் பயணிகள்.
திடீரென விமானம் அதிரத்தொடங்க, மக்கள் பயந்து அலறத்தொடங்கியிருக்கிறார்கள். குட்டிப் பெண் ஒருத்தி தனியாக பயணித்த நிலையில், அவருக்கு எதிர் பக்கம் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அந்த சிறுமி பயப்படக்கூடாது என்பதற்காக அவளது கையைப் பிடித்துக்கொண்டாராம்.
அப்போது, ஜன்னல் வழியாக தான் கண்ட காட்சியை வீடியோ எடுத்துள்ளார் Michelle. அந்த காட்சியைப் பார்த்த ஒரு பெண், அவ்வளவுதான் நம் கதை முடிந்தது, விமானம் விழப்போகிறது என்று கூறினாராம். என் வாழ்க்கையிலேயே திகிலான தருணம் அது என்கிறார் Michelle.
விமானிகள் ஐந்து நிமிடம் வரை விமானத்தை Kelowna விமான நிலையத்தில் தரையிறக்க பாடுபட்டார்களாம். முடியாமல் போகவே, மீண்டும் வான்கூவருக்கே திரும்பியுள்ளது அந்த விமானம். காட்டுத்தீயின் தாக்கம் எப்படியெல்லாம் மக்களை பாதிக்கிறது பாருங்கள்!