கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாவது தடுப்பூசியா?
கொரோனா வைரசுக்கு எதிராக கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கூறப்பட்டதாவது, கர்ப்பிணி பெண்கள் கொரோனாவுக்கான தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றிருந்தால், எவ்வித தயக்கமும் இன்றி மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளலாம். என மகளிர் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது.
Groupe de Recherche sur les Infections Pendant la Grossesse நிறுவனம், College national des gynecologues et obstetriciens கல்லூரியுடன் இணைந்து மேற்கொண்டிருந்த ஆய்வின் அறிக்கையிலையே இவை தெரிவிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் கர்ப்பிணி பெண்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் தொகையினை தற்போது வரையில் அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.