மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப் நியமனம்!
மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாகோப்பை (Ismail Sabri Yaakob) அந்த நாட்டு மன்னா் நியமித்துள்ளாார்.
கடந்த திங்கள்கிழமை பதவி விலகிய தற்போதைய பிரதமர் முகைதீன் யாசீன் அமைச்சரவையில் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் இஸ்மாயில் சப்ரி, நாட்டின் 8-ஆவது பிரதமராக சனிக்கிழமை (ஆக. 21) பதவியேற்கிறார்.
அவரது நியமனத்தின் மூலம், முகைதீனின் கூட்டணி தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டனிடமிருந்து மலேசியா கடந்த 1957-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து நாட்டை ஆண்டு வந்த மலாய்ஸ் தேசியக் கட்சியைச் சோந்த ஒருவா், மீண்டும் பிரதமா் ஆகிறாா்.
முன்னதாக, மலேசிய நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் முகைதீன் யாசீன் தனது பதவியை கடந்த திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோதலுக்குப் பிறகு மகாதிர் முகமது நாட்டின் பிரதமரானாா். அவரது கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை முகைதீன் யாசீன் தலைமையிலான கட்சி திரும்பப் பெற்றதால், மகாதிா் முகமது தனது பதவியை ராஜினாமா செய்தாா்.
அதைத் தொடா்ந்து, முக்கிய எதிா்க்கட்சிகளுடன் இணைந்து முஹைதீன் யாசீன் நாட்டின் பிரதமர் பொறுப்பைக் கடந்த ஆண்டு மாா்ச்சில் ஏற்றாா்.
இந்நிலையில், நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவா் பெரும்பான்மை பெறத் தவறியதால், தனது பதவியை ராஜினாமா செய்தாா்.