காசா மீது இஸ்ரேல் தொடுத்த வான்தாக்குதல்... 51 பேர் கொல்லப்பட்டிருக்கலாம்!
பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான்தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் காசா நகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல் ஜபாரி உள்பட இதுவரை 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் நடந்த தாக்குதலில், இதுவரை 51 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
அவர்களில் 24 பேர் காசா இஸ்லாமிய ஜிகாத் பயங்கரவாத பிரிவை சார்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.
இதில் தொடர்பில்லாதவர்கள் 11 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது.
மொத்தம் குழந்தைகள் உட்பட காசா பகுதி பொதுமக்கள் 27 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் அடங்குவர் என அதிகாரிகள் கூறினர்.