காசாவில் உணவுக்கு காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் ஈவிரக்கமின்றி தாக்குதல்
காசாவின் கான்யூனிஸ் பகுதியில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 45க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கான்யூனிசின் பிரதான கிழக்கு வீதியில் உணவு வாகனங்களிற்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேல் டாங்கி தாக்குதலை மேற்கொண்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் டாங்கி தாக்குதலில் காயமடைந்த உயிரிழந்த 300க்கும் மேற்பட்டவர்கள் நாசா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என மருத்துவர் முகமெட சஹெர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையை கையாள முடியாத நிலையில் மருத்துவமனை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்